ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா! | ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி | ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு! | மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! | சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்! | சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு |

போதை பொருள் பயன்படுத்தியதாக தமிழ் நடிகர்கள், ஸ்ரீகாந்த், மற்றும் கிருஷ்ணா கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு இருவரும் ஜாமீனில் விடப்பட்டனர். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
போதை மருந்து தொடர்பான வழக்கு நடந்து வரும் அதே நேரத்தில் இந்த விஷயத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரிடம் விசாரணை நடத்த வசதியாக அவர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் வருகிற 28ம் தேதியும், கிருஷ்ணா 29ம் தேதியும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.