ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பத்து பேர் ஒரே மாதிரியாக உடையணிந்து அதில் ஒருவர் மட்டும் அவர்களிடமிருந்து மாறுபட்ட உடையணிந்தாலே மற்றவர்களின் கவனம் அவர் மீது திரும்புவது இயற்கையான விசயம்தான். அப்படித்தான், இதுநாள்வரை பேண்ட்-சட்டையிலேயே தனது பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தனுஷ், திடீரென்று அம்பிகாபதி பிரஸ்மீட்டிற்கு வேஷ்டி சட்டையில் என்ட்ரி கொடுத்ததும் அனைவரும் அவரை ஆச்சர்யமாக பார்த்தனர்.
அதோடு, அப்பட நாயகி சோனம் கபூரும் புடவை கட்டி வந்திருந்தார். கட்டிய புடவை அங்குமிங்கும் நழுவிக்கொண்டேயிருக்க, அதை அவ்வப்போது சரி செய்வதே அவருக்கு பெரிய வேலையாக இருந்தது. அதனால் அவரையும் அனைவரும வேடிக்கை பார்த்தனர்.
அதைப்பார்த்த தனுஷ், என்ன அப்படி பார்க்கிறீர்கள். நான் நம்ம ஊர் வேஷ்டி அணிந்து வந்திருக்கிறேன். சோனம் நம்ம ஊர் புடவையை கட்டி வந்திருக்கிறார். எத்தனை விதவிதமான உடைகள் அணிந்தாலும், நம்ம பாரம்பரிய உடைகளை அணிந்து வந்தாலே தனி மரியாதைதான். அதோடு ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது என்றார் தனுஷ்.
மேலும், இனி நம்ம ஊர் மட்டுமின்றி, மும்பையில் நடக்கும் பட விழாக்கள் என்றாலும் வேஷ்டி அணிந்தே செல்வது என்ற முடிவில் இருக்கிறேன் என்றும் கூறிய தனுஷ், வேஷ்டி அணிவது மற்ற உடைகளை விட ரொம்ப எளிமையானது, ரொம்ப வசதியானதும்கூட என்றார்.