விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' | அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா |
தமிழ் சினிமாவில் நடிகர் கமல் தவிர கிட்டத்தட்ட பெரும்பாலான முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் ஏ.ஆர் முருகதாஸ். தற்போது அவர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக விஜய், அஜித் என்கிற இரண்டு பேருடனும் இணைந்த இவர் பணியாற்றியுள்ளதால் இவர்கள் இருவர் பற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி சமீபத்திய ஒரு பேட்டியின்போது விஜய் பற்றி அஜித்தும், அஜித் பற்றி விஜய்யும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு ஏ.ஆர் முருகதாஸ் பதில் அளிக்கும்போது, “விஜய்யை பொருத்தவரை என்னிடம் சினிமா சம்பந்தமாக பேசுவாரே தவிர மற்ற எந்த நடிகர்களையும் பற்றி அவர் ஒருபோதும் பேச மாட்டார். அதேபோல அஜித் என்னிடம் பேசும்போது சினிமா பற்றி கூட பேசவே மாட்டார். சினிமாவை தவிர மற்ற எல்லா விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அதேசமயம் ரஜினி சாருடன் பணியாற்றிய போது அவருடன் பேசினால் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கமல் மற்றும் பாலச்சந்தர் இவர்கள் இருவர் பற்றி பேசாமல் இருக்கவே மாட்டார்” என்றும் கூறியுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ்.