ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
‛பேரன்பு' படத்திற்கு பிறகு ராம் இயக்கி உள்ள படம் 'பறந்து போ'. இந்த படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாகவும், மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி நாயகியாகவும், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரேயோன், அஞ்சலி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளனர். படம் வருகிற ஜூலை 4ம் தேதி வெளியாகிறது.
இதில் மலையாள நடிகை கிரேஸ்ஆண்டனி கால்ஷீட்டுக்காக 4 மாதங்கள் காத்திருந்திருக்கிறார் ராம். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ‛‛கனவுகளை அடைவதற்காகப் போராடும் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் கதைதான் இந்தப் படம். தங்களால் அடைந்துவிட முடியாத அனைத்தையும் தங்கள் குழந்தைகளாவது அடைந்துவிட வேண்டும் என்பதற்காக அயராது உழைக்கும் அப்பா அம்மாக்களின் கதைதான் இது.
அவர்கள் தங்கள் குழந்தைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்கிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு எது தேவை என குழந்தைகளிடம் அவர்கள் கேட்பதில்லை. குழந்தைகளின் உலகத்திற்கும் பெற்றோர்களின் உலகத்திற்குமான இடைவெளி கூடிக்கொண்டே போகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளின் உலகத்திற்கும் பெற்றோர்களின் உலகத்திற்கும் நடக்கிற உரையாடலே படத்தின் கதை.
கிரேஸ் ஆண்டனிக்கு தமிழில் இது முதல் படம். 'கும்பளங்கி நைட்ஸ்' படத்தில் நடித்திருக்கிறார். அவர் நடித்த 'அப்பன்' படம் பார்த்தேன். அதில் 15 நிமிடமே ஒரு கேரக்டரில் வந்து ரியாக்ஷன்களில் பிரமாதப்படுத்தியிருப்பார். இவர்தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, அவருக்காக நான்கு மாதம் வரை காத்திருந்து அவரைக் கொண்டு வந்தேன். கிரேஸ் கொஞ்சம் முயற்சி செய்தால் ஊர்வசி இடத்திற்கு வந்து உட்கார்ந்துவிடுவார். தமிழில் அவருக்கு ஒரு கதவு திறக்கும் என்பது என் கணிப்பு'' என்கிறார் ராம்.