'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை நேற்று (ஜூன் 23) நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தார்கள். அவருக்கு தான் கொக்கைன் கொடுத்ததாக பிரதீப் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு நடத்தப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரும் தான் செய்த தவறை ஒத்துக் கொண்டதோடு தனக்கு ஜாமின் கேட்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், பிரசாத் என்ற அந்த நபர் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி நடிகர் கிருஷ்ணாவுக்கும் தான் கொக்கைன் கொடுத்ததாக தெரிவித்ததன் அடிப்படையில் தற்போது கேரளாவில் படப்பிடிப்பில் இருந்து வரும் நடிகர் கிருஷ்ணாவையும் தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தியுள்ளார்கள். மேலும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என்பது தெரிகிறது.




