தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

துல்கர் சல்மான் நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. அதையடுத்து அவர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதாகவும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் சிம்பு நடிக்கும் ஐம்பதாவது படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். அந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்நிறுவனம் வெளியேறியதை அடுத்து சிம்புவே அந்த படத்தை தயாரித்து நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது. என்றாலும் தற்போது வரை அந்த படம் தொடங்கப்படவில்லை. அதோடு ஏற்கனவே மூன்று புதிய படங்களில் கமிட்டாகி இருந்த சிம்பு, தற்போது வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நேரத்தில் சிம்புவுக்கு இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த தேசிங்கு பெரியசாமி அடுத்தபடியாக 'ஜெய் பீம், குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்' போன்ற படங்களில் நடித்த மணிகண்டனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதன் காரணமாக சிம்புவின் ஐம்பதாவது படம் டிராப் செய்யப்பட்டதா? இல்லை தள்ளி வைக்கப்பட்டுள்ளதா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது.