'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 'நாயகன்' படத்தை அடுத்து 38 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி 'தக்லைப்' படத்தில் இணைந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் தோல்வி குறித்து ஒரு பேட்டியில் இயக்குனர் மணிரத்னம் கூறுகையில், ''எங்களது கூட்டணியில் நாயகன் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ஒரு படமாக இருந்தது. அதனால் அவர்கள் இந்த தக்லைப் படத்தை இன்னொரு நாயகனாகவே எதிர்பார்த்துள்ளார்கள். ஆனால் நாங்கள் மீண்டும் நாயகன் பாணியில் ஒரு படம் எடுக்க விரும்பவில்லை. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை கொடுப்பதற்கே திட்டமிட்டோம். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு மாதிரியாக இருக்க, நாங்கள் இன்னொரு மாதிரியாக இந்த தக்லைப் படத்தை கொடுத்திருந்தோம். அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. படத்தின் தோல்விக்கு அதுதான் காரணம்.
அவர்கள் நாயகனை கருத்தில் கொள்ளாமல் இந்த தக்லைப் படத்தை பார்த்திருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு பிடித்திருக்கும். என்றாலும் ரசிகர்கள் விரும்பும் வகையில் இந்த படத்தை கொடுக்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறி உள்ளார் மணிரத்னம்.