மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 'நாயகன்' படத்தை அடுத்து 38 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி 'தக்லைப்' படத்தில் இணைந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் தோல்வி குறித்து ஒரு பேட்டியில் இயக்குனர் மணிரத்னம் கூறுகையில், ''எங்களது கூட்டணியில் நாயகன் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ஒரு படமாக இருந்தது. அதனால் அவர்கள் இந்த தக்லைப் படத்தை இன்னொரு நாயகனாகவே எதிர்பார்த்துள்ளார்கள். ஆனால் நாங்கள் மீண்டும் நாயகன் பாணியில் ஒரு படம் எடுக்க விரும்பவில்லை. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை கொடுப்பதற்கே திட்டமிட்டோம். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு மாதிரியாக இருக்க, நாங்கள் இன்னொரு மாதிரியாக இந்த தக்லைப் படத்தை கொடுத்திருந்தோம். அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. படத்தின் தோல்விக்கு அதுதான் காரணம்.
அவர்கள் நாயகனை கருத்தில் கொள்ளாமல் இந்த தக்லைப் படத்தை பார்த்திருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு பிடித்திருக்கும். என்றாலும் ரசிகர்கள் விரும்பும் வகையில் இந்த படத்தை கொடுக்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறி உள்ளார் மணிரத்னம்.