எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
மு.மாறன் இயக்கும் 'பிளாக்மெயில்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து இருக்கிறார் 'ரோஜாக்கூட்டம்' ஸ்ரீகாந்த். அவர் ஜோடியாக பிந்துமாதவி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோ. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு, புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டாலும், ஸ்ரீகாந்த் கலந்து கொள்ளவில்லை.
போதை மருந்து பயன்படுத்திய குற்றத்துக்காக ஜெயிலுக்கு போய் ஜாமினில் வந்தவர், குற்ற உணர்வு, பயம் காரணமாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயங்குகிறார். ஜாமினில் வந்தவர் மற்ற பொது நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளவில்லை. அவர் சினிமாவுக்கு வந்து 23 ஆண்டுகள் ஓடிவிட்டன.
கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடவில்லை. கடந்த ஆண்டு அவர் நடித்த 'தினசரி, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' என 2 படங்கள் வந்தன. இரண்டுமே பிளாப். அதனால், ஹீரோ அல்லாத ரோலில் அவர் நடிக்க ஆரம்பித்தார். அதற்குள் போதை பிரச்னையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார் என்கிறார்கள் கோலிவுட்டில்.