ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

மு.மாறன் இயக்கும் 'பிளாக்மெயில்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து இருக்கிறார் 'ரோஜாக்கூட்டம்' ஸ்ரீகாந்த். அவர் ஜோடியாக பிந்துமாதவி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோ. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு, புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டாலும், ஸ்ரீகாந்த் கலந்து கொள்ளவில்லை.
போதை மருந்து பயன்படுத்திய குற்றத்துக்காக ஜெயிலுக்கு போய் ஜாமினில் வந்தவர், குற்ற உணர்வு, பயம் காரணமாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயங்குகிறார். ஜாமினில் வந்தவர் மற்ற பொது நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளவில்லை. அவர் சினிமாவுக்கு வந்து 23 ஆண்டுகள் ஓடிவிட்டன.
கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடவில்லை. கடந்த ஆண்டு அவர் நடித்த 'தினசரி, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' என 2 படங்கள் வந்தன. இரண்டுமே பிளாப். அதனால், ஹீரோ அல்லாத ரோலில் அவர் நடிக்க ஆரம்பித்தார். அதற்குள் போதை பிரச்னையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார் என்கிறார்கள் கோலிவுட்டில்.




