டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் |
தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணசித்திர மற்றும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. பெரும்பாலான முன்னனி நடிகர்களின் படங்களில் யோகி பாபு ஒரு காட்சியிலாவது இடம் பெறுவார். சமீபத்தில் யோகி பாபு அளித்த பேட்டி ஒன்றில் சில சர்ப்ரைஸ் ஆன விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், "சுந்தர்.சி. ரொம்பவே கஷ்டப்பட்டு என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளார். எனக்கு இயக்குனர் ஆக வேண்டும் என ஐடியா கிடையாது. ஆனால், அடிப்படையில் நான் வசனங்களை எழுதுவேன். எழுத்தாளர் சங்கத்தில் கடந்த பத்து வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். அதனால் கதைகள் எழுதி தர தயார். ஆனால், படங்களை இயக்க விருப்பமில்லை. சினிமாவில் உதவி இயக்குநர் ஆகணும்னு தான் விரும்பினேன். ராம்பாலா சார் தான் என்னை நடிகனாக மாற்றினார்" என தெரிவித்தார்.