கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ், 75 வயதில் சென்னையில் நேற்றுமுன்தினம் மாரடைப்பால் காலமானார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என கிட்டத்தட்ட 50 ஆண்டுளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சீரியல், டப்பிங் ஆர்டிஸ்ட், தொழிலதிபர் என பன்முக திறமை கொண்டவர் ராஜேஷ்.
சினிமாவில் நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர், கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாதவர். சமீபத்தில் அவர் துபாய் சென்று வந்தார். அதன்பின் அவரது உடலில் அசவுகரியங்கள் ஏற்பட மாரடைப்பால் இறந்தார். ராஜேஷ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இளையராஜா, பார்த்திபன், சத்யராஜ், சிவகுமார், விஷால், நாசர், கார்த்தி, அஜய் ரத்னம், வையாபுரி, எம்எஸ் பாஸ்கர், பேரரசு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ராஜேஷின் மகள் கனடாவில் இருந்து வர வேண்டியிருந்ததால் அவரது இறுதிச்சடங்கு நடைபெறாமல் இருந்தது. தற்போது அவர் சென்னை திரும்பிவிட்டார். இன்று மாலையில் கீழ்ப்பாக்கத்தில் ராஜேஷின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று(மே 31) ராஜேஷ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் இடையே ஆறுதல் கூறினார். முன்னதாக ராஜேஷ் மறைவுக்கு எக்ஸ் தளத்தில் ரஜினி இரங்கல் தெரிவித்து இருந்தார்.
ராஜேஷ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி : ‛‛ராஜேஷ் எப்படி வாழ்ந்தார் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் வந்து அஞ்சலி செலுத்தியதே சான்று. சினிமா, அரசியல், விஞ்ஞானம், மெய்ஞானம் என அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. என்னை அடிக்கடி சந்திப்பார். நீங்க நீண்டநாள் வாழணும், அதற்கு என்னென்ன செய்யணும், சாப்பிடணும் எல்லாம் சொல்வார். நல்ல மனிதர், திடீரென அவர் இல்லையென்பது வருத்தமாக உள்ளது. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்'' என்றார்.




