நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தோனி படத்தில் தமிழுக்கு வந்த ராதிகா ஆப்தே, அதன்பிறகு ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது ஹிந்தி, மராத்தி, தெலுங்கு என பல படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாகவும், அந்த படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் அந்த செய்தியை மறுத்திருக்கிறார் ராதிகா ஆப்தே . அவர் கூறுகையில், பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நடிப்பதற்கு இதுவரை என்னை யாருமே அணுகவில்லை. இப்படி ஒரு செய்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது என்று பதில் கொடுத்திருக்கிறார் ராதிகா ஆப்தே.