இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைப். வருகிற ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தை அடுத்து புதுமுகங்களை வைத்து படம் இயக்கப் போவதாக தக் லைப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது கூறிய மணிரத்னம், அந்த படத்திற்கு சரியான நடிகர்கள் கிடைக்காத பட்சத்தில் வேறு ஒரு படத்தை இயக்குவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நேரத்தில் தற்போது சிம்பு நடிக்க இருந்த 49வது படத்தின் தயாரிப்பு பணிகள் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சிம்புவிடத்தில் அந்த கால்சீட்டை வாங்கி அவரை வைத்து தனது புதிய படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம், தக் லைப் படங்களில் நடித்த சிம்பு மூன்றாவது முறையாக நடிக்கப் போகிறார். அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.




