மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
கடந்த 2023ல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கூலி படத்தை முடித்து விட்ட ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். கோழிக்கோடு அருகே உள்ள செருவன்நூர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் இங்கே படப்பிடிப்பு நடைபெறும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கேரள மாநில சுற்றுலா துறை அமைச்சர் பிஏ முகமது ரியாஸ் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் வருகை தந்து மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்துள்ளார். ரஜினி உடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அமைச்சர் முகமது ரியாஸ், “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என ரஜினியின் பஞ்ச் டயலாக்கையும் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் கோழிக்கோடு பகுதியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது.