மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
கடந்த 2023ல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கூலி படத்தை முடித்து விட்ட ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். கோழிக்கோடு அருகே உள்ள செருவன்நூர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் இங்கே படப்பிடிப்பு நடைபெறும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கேரள மாநில சுற்றுலா துறை அமைச்சர் பிஏ முகமது ரியாஸ் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் வருகை தந்து மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்துள்ளார். ரஜினி உடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அமைச்சர் முகமது ரியாஸ், “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என ரஜினியின் பஞ்ச் டயலாக்கையும் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் கோழிக்கோடு பகுதியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது.