ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
முனி படத்தின் இரண்டாம் பாகமான காஞ்சனாவை பெரிய ஹிட் படமாக கொடுத்த ராகவா லாரன்ஸ், அப்படத்தின் மூன்றாம் பாகமான கங்கா படத்தை இன்னும் பெரிய அளவில் வெற்றிப்படமாக கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார். அதனால்தான், இரண்டாம் பாகத்தை முடித்த கையோடு மூன்றாம் பாகத்தின் வேலைகளில் இறங்காமல், பல மாதங்களாக அதற்கான கதை விவாதத்தை நடத்தி வந்தார்.
மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படத்தை இயக்கும் லாரன்ஸ், தமிழ்ப்பதிப்பில் ஹீரோயினியாக நடிக்க டாப்ஸியை புக் பண்ணிவிட்டவர், தெலுங்கில்தான் சில மாதங்களாக தனது கதைக்கு பொருத்தமான நடிகையை தேடி வந்தார். ஆனால், இவர் கால்சீட் கேட்க நினைக்கும் நடிகைகள் வருடக்கணக்கில் தங்கள் கால்சீட் டைரியை புல் பண்ணி வைத்திருக்கிறார்களாம். அதனால், இப்போது அஞ்சலியை தெலுங்கு பதிப்புக்கு புக் பண்ணி விட்டாராம் லாரன்ஸ்.
தெலுங்கில் பல்பு, கோல்மால் போன்ற படங்களில் நடிக்கும் அஞ்சலி, லாரன்ஸ் படத்தில் நடிப்பதற்காக மொத்த கால்சீட்டாக அள்ளிக்கொடுத்து விட்டாராம். மேலும், டாப்ஸியும் அஜீத்தின் 53வது படத்துக்குப்பிறகு லாரன்ஸ் படத்துக்காக ப்ரீயாக இருந்து வருவதால், மொத்த ஆர்ட்டிஸ்டுகளையும் ஸ்பாட்டில் வைத்துக்கொண்டு படப்பிடிப்பு தொடங்கி விட்டார் லாரன்ஸ்.