உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் | மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் |
விழுப்புரம் கூவாகம் திருநங்கைகள் அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சென்ற நடிகர் விஷால் திடீரென மயக்கம் அடைந்தது, நேற்று இரவு பரபரப்பு செய்தியானது. அவர் உடலுக்கு பழைய படி பிரச்னையா? அவர் எப்படி இருக்கிறார் என கோலிவுட்டில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், அவர் தரப்போ, ''காலையில் இருந்து சரியாக சாப்பிடவில்லை. ஜூஸ் மட்டுமே குடித்தார். நீண்ட பயணம், கூட்டம் அதிகம் காரணமாக மயக்கம் ஏற்பட்டது. டாக்டர்கள் பார்த்துவிட்டு ஒன்றுமில்லை. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்'' என அட்வைஸ் செய்ததாக கூறியது.
உடல் எடை பிரச்னை, டயட் காரணமாக பல ஆண்டுகளாக விஷால் அரிசி சாதம் சாப்பிடுவது இல்லை. வேறு வகையான டயட் உணவுகளை சாப்பிடுகிறார். அதனால், சரியாக சாப்பிடாததால் அவர் வீக் ஆகிவிட்டார் என்றும் கூறப்பட்டது.
அடுத்து ரவி அரசு இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறார் விஷால், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இயக்குனர் கவுதம்மேனனும் விஷாலை வைத்து படம் பண்ண முயற்சித்து வருகிறார்.