பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோ சிரஞ்சீவி. தற்போது 'விஷ்வம்பரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அப்படத்திற்குப் பிறகு அனில் ரவிப்புடி இயக்க உள்ள புதிய படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.
இந்த புதிய பபடத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளார். அவர் படத்தில் நடிக்க 18 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டதாக செய்திகள் வெளியாகின. அவ்வளவு சம்பளத்தைக் கொடுக்கத் தயாரிப்பு நிறுவனம் யோசித்தாகச் சொன்னார்கள். இருந்தாலும் படத்தில் நயன்தாரா நடிப்பதை இயக்குனரும், சிரஞ்சீவியும் விரும்பியதாகத் தெரிகிறது.
தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில கோடிகளைக் குறைத்துக் கொள்ள நயன்தாரா சம்மதம் சொல்லிவிட்டாராம். ஒப்பந்தம் கையெழுத்தானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
அனில் ரவிப்புடி கடைசியாக இயக்கி பொங்கலுக்கு வெளிவந்த 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 'சைரா ' படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்த நயன்தாரா அடுத்து வந்த 'காட்பாதர்' படத்தில் தங்கையாக நடித்தார். இப்போது ஜோடியாக நடிக்க உள்ளார்.