'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோ சிரஞ்சீவி. தற்போது 'விஷ்வம்பரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அப்படத்திற்குப் பிறகு அனில் ரவிப்புடி இயக்க உள்ள புதிய படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.
இந்த புதிய பபடத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளார். அவர் படத்தில் நடிக்க 18 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டதாக செய்திகள் வெளியாகின. அவ்வளவு சம்பளத்தைக் கொடுக்கத் தயாரிப்பு நிறுவனம் யோசித்தாகச் சொன்னார்கள். இருந்தாலும் படத்தில் நயன்தாரா நடிப்பதை இயக்குனரும், சிரஞ்சீவியும் விரும்பியதாகத் தெரிகிறது.
தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில கோடிகளைக் குறைத்துக் கொள்ள நயன்தாரா சம்மதம் சொல்லிவிட்டாராம். ஒப்பந்தம் கையெழுத்தானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
அனில் ரவிப்புடி கடைசியாக இயக்கி பொங்கலுக்கு வெளிவந்த 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 'சைரா ' படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்த நயன்தாரா அடுத்து வந்த 'காட்பாதர்' படத்தில் தங்கையாக நடித்தார். இப்போது ஜோடியாக நடிக்க உள்ளார்.




