பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம்தான் பாடத் திட்டங்களை வரையறை செய்து வருகிறது. சமீபத்தில் 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்கள், டில்லி சுல்தான்களின் வரலாறு நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
இதுகுறித்து மாதவன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "பள்ளியில் வரலாறு படித்தபோது முகலாயர்கள், ஹரப்பா-மொகஞ்சதாரோ நாகரிகங்கள், பிரிட்டிஷ் ஆட்சி, சுதந்திர போராட்டத்தை பற்றி பல அத்தியாயங்கள் இருந்தன. ஆனாலும் சேர, சோழ, பாண்டியர்கள் பற்றி ஒரே ஒரு அத்தியாயமே இருந்தது.
ஆங்கிலேயர்களும், முகலாயர்களும் நம்மை 800 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஆனால் சோழ பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது. நமது வரலாற்றின் அந்த பகுதி எங்கே? தமிழ் மன்னர்களின் வீரம் செறிந்த வரலாற்று எங்கே போனது? உலகின் பழமையான மொழியான தமிழ் பற்றி யாருக்கும் தெரியாது. நமது கலாசாரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் அறிவு தற்போது கேலி செய்யப்பட்டு வருகிறது'', என்று தெரிவித்துள்ளார்.