என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? |

சென்னையில் நேற்று நடந்த கஜானா பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில், ‛‛இந்த படத்தில் நடித்த யோகிபாபு பட பிரொமோஷன் நிகழ்ச்சிக்கு வர மறுக்கிறார். அதற்கு தனியாக 7 லட்சம் கேட்கிறார். இது தவறு. அவர் நடிக்க லாயக்கு அற்றவர், இது மோசமான செயல்" என தயாரிப்பாளர் ராஜா என்பவர் குற்றம் சாட்டினார்.
ஆனால் யோகிபாபு தரப்போ "அந்த படத்தின் தயாரிப்பாளர் சாம் என்பவர். இவர் யார் என்றே தெரியாது. பல ஆண்டுகளாக இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. யோகிபாபு அவ்வளவு பிசியாக இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் நடித்து வருகிறார். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றால் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புக்கு பாதிப்பு வரும். அதனால் பல லட்சம் இழப்பை தயாரிப்பாளர் சந்திக்க நேரிடும். இதை மற்ற படக்குழுவினர் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் முடிந்தவரை தான் நடிக்கும் பட நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்" என்கிறது.