2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டால் இந்தப் படத்தின் கதை என்னுடையது தான் என்று சிலர் குற்றச்சாட்டுகளுடன் கிளம்பி வருவது சமீப வருடங்களாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் சில குற்றச்சாட்டுகள் நிரூபணமும் ஆகி உள்ளன. பெரும்பாலனவை நிரூபிக்கப்படாமலேயே போனதும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் தருண்மூர்த்தி இயக்கத்தில் வெளியான தொடரும் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சில வருடங்களுக்குப் பிறகு மோகன்லால் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் உதவி இயக்குனர் ஏபி நந்தகுமார் என்பவர் இந்த படத்தின் கதை, தான் 20 வருடங்களுக்கு முன்பே எழுதிய ராமன் என்கிற கதையை தழுவி அப்படியே எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தொடரும் படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய ராமன் கதையில் இருக்கும் பல சம்பவங்கள் அப்படியே அதிலும் இடம் பெற்றுள்ளதாக அதிர்ச்சி அடைந்த ஏபி நந்தகுமார் கேரளாவில் உள்ள மூலம்துருத்தி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “பல வருடங்களுக்கே கதையை நான் எழுதி விட்டேன். 2021ல் அதை ஒரு பிடிஎப் டாக்குமெண்ட் ஆகவும் நான் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். இந்த கதையை நடிகர்கள் பாலா மற்றும் நகைச்சுவை நடிகர் ஹரிஸ்ரீ அசோகன் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலரிடம் அவர்களது கருத்துக்களை கேட்பதற்கு கூறியுள்ளேன். அது மட்டுமல்ல கதையின் பிரின்ட் காப்பி ஒன்றை நடிகர் பாலாவிடமும் கொடுத்திருந்தேன்” என்று தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் உதவி இயக்குனர் ஏ.பி நந்தகுமார்.