'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
அல்லு அர்ஜுன், அட்லி இணைய உள்ள பிரம்மாண்டப் படத்தில் மூன்று கதாநாயகியர் நடிக்கப் போவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளிவந்தன. பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்கள் சிலரிடம் அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. சிலர் கால்ஷீட் இல்லாத காரணத்தால் நடிக்க முடியாத சூழலை சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி மிருணாள் தாகூர் முதல் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். விரைவில் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகலாம் என்றும் தெரிகிறது. மூன்றாவது கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது விரைவில் முடிவாகலாம்.
'சீதா ராமம், ஹாய் நானா' படங்கள் மூலம் தெலுங்கு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் மிருணாள். ஹிந்தியிலும் அவர் நடித்துள்ளதால் படத்தின் பான் இந்தியா வெளியீட்டிற்குப் பொருத்தமாக இருப்பார் எனத் தேர்வு செய்துள்ளார்களாம். படத்தின் கதாநாயகிகள் யார் யார் என்பது குறித்த அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.