எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் |

அல்லு அர்ஜுன், அட்லி இணைய உள்ள பிரம்மாண்டப் படத்தில் மூன்று கதாநாயகியர் நடிக்கப் போவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளிவந்தன. பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்கள் சிலரிடம் அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. சிலர் கால்ஷீட் இல்லாத காரணத்தால் நடிக்க முடியாத சூழலை சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி மிருணாள் தாகூர் முதல் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். விரைவில் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகலாம் என்றும் தெரிகிறது. மூன்றாவது கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது விரைவில் முடிவாகலாம்.
'சீதா ராமம், ஹாய் நானா' படங்கள் மூலம் தெலுங்கு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் மிருணாள். ஹிந்தியிலும் அவர் நடித்துள்ளதால் படத்தின் பான் இந்தியா வெளியீட்டிற்குப் பொருத்தமாக இருப்பார் எனத் தேர்வு செய்துள்ளார்களாம். படத்தின் கதாநாயகிகள் யார் யார் என்பது குறித்த அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.