ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
அல்லு அர்ஜுன், அட்லி இணைய உள்ள பிரம்மாண்டப் படத்தில் மூன்று கதாநாயகியர் நடிக்கப் போவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளிவந்தன. பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்கள் சிலரிடம் அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. சிலர் கால்ஷீட் இல்லாத காரணத்தால் நடிக்க முடியாத சூழலை சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி மிருணாள் தாகூர் முதல் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். விரைவில் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகலாம் என்றும் தெரிகிறது. மூன்றாவது கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது விரைவில் முடிவாகலாம்.
'சீதா ராமம், ஹாய் நானா' படங்கள் மூலம் தெலுங்கு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் மிருணாள். ஹிந்தியிலும் அவர் நடித்துள்ளதால் படத்தின் பான் இந்தியா வெளியீட்டிற்குப் பொருத்தமாக இருப்பார் எனத் தேர்வு செய்துள்ளார்களாம். படத்தின் கதாநாயகிகள் யார் யார் என்பது குறித்த அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.