மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்தனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம் பெற்ற ‛வீரா ராஜா வீரா' என்ற பாடல் சிவா ஸ்துதி பாடலை போல் உள்ளதாக பயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பான வழக்கில் ‛சிவா ஸ்துதி' பாடல்கள் மூலம் ஈர்க்கப்பட்டு அதை தழுவி ‛வீரா ராஜா வீரா' பாடலை உருவாக்கியதாக ரஹ்மானே கோர்ட்டில் தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் காப்புரிமை சட்டப்படி ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடியை டில்லி ஐகோர்ட் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் மனுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.