'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
'கூலி' படத்தை முடித்துவிட்ட ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்-2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பஹத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் உள்ள ஆணைக்கட்டி, மாங்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆணைக்கட்டியில் இருந்து மாங்கரைக்கு ரஜினிகாந்த் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் அமைந்துள்ள மாதேஸ்வரர் கோயிலில் இறங்கி சாமி தரிசனம் செய்திருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், கோயில் வாசலில் ரஜினியின் கார் வந்து நின்றதும், பூசாரி ஓடிவந்து அவரை வரவேற்க, ரஜினி கோயிலுக்குள் சென்றதும் பூஜை தீபாராதனை நடத்தப்பட்டு சாமி தரிசனம் செய்கிறார். அதையடுத்து அவருக்கு பூசாரி விபூதி பூசி விடும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.