ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
'கூலி' படத்தை முடித்துவிட்ட ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்-2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பஹத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் உள்ள ஆணைக்கட்டி, மாங்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆணைக்கட்டியில் இருந்து மாங்கரைக்கு ரஜினிகாந்த் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் அமைந்துள்ள மாதேஸ்வரர் கோயிலில் இறங்கி சாமி தரிசனம் செய்திருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், கோயில் வாசலில் ரஜினியின் கார் வந்து நின்றதும், பூசாரி ஓடிவந்து அவரை வரவேற்க, ரஜினி கோயிலுக்குள் சென்றதும் பூஜை தீபாராதனை நடத்தப்பட்டு சாமி தரிசனம் செய்கிறார். அதையடுத்து அவருக்கு பூசாரி விபூதி பூசி விடும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.