'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக மற்றும் குணச்சித்ர கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரியதர்ஷி புலிகொண்டா. இவர் ஏ.ஆர்.முருகதாஸின் ‛ஸ்பைடர்', ஷங்கரின் ‛கேம் சேஞ்சர்' உள்ளிட்டட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் தெலுங்கில் 'கோர்ட்' எனும் படத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சமீபத்தில் தமிழில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமா குறித்து அவர் கூறியதாவது,"ஷங்கர் சார், ஏ.ஆர்.முருகதாஸ் சார் இயக்கத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷம். சினிமாவில் கமல்ஹாசன் சார்தான் என்னோட இன்ஸ்பிரேஷன். அவர்கூட நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதேமாதிரி, மணிரத்னம் சார், பா.ரஞ்சித் சார், வெற்றிமாறன் சார் படங்களில் நடிக்கணும்னு என் விருப்பம். பா.ரஞ்சித் சார் நான் பிரமிக்கிற பெரிய இயக்குநர். மக்களை நேசிக்கிற சமூகச் செயற்பாட்டாளர். அவர் படத்துல நடிக்கணும்னு ரொம்பவே ஆசைப்படுறேன்" என இவ்வாறு தெரிவித்துள்ளார்.