'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பான் இந்தியா படங்கள் என்றாலே அதைத் தெலுங்கு இயக்குனர்கள் வசூலில் தட்டித் தூக்கிவிடுகின்றனர் என தெலுங்குத் திரையுலகத்தினர் பெருமையாக நினைக்கிறார்கள்.
'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' படங்களுக்காக ராஜமவுலி, 'கல்கி 2898 ஏடி' படம் மூலம் நாக் அஷ்வின், 'புஷ்பா 2' மூலம் சுகுமார் என நான்கு 1000 கோடி படங்களைத் தந்துள்ளனர் தெலுங்கு இயக்குனர்கள். இடையில் கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல் 'கேஜிஎப் 2' மூலம் 1000 கோடி வசூலைத் தந்திருக்கிறார்.
தமிழ்ப் படமாக இல்லை என்றாலும், தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஹிந்திப் படமான 'ஜவான்' படமும் 2023ல் 1000 கோடி வசூலித்தது.
மேலே குறிப்பிட்ட 6 படங்களைத் தவிர 'டங்கல், பதான்' ஆகிய 1000 கோடி படங்களை ஹிந்தி இயக்குனர்கள்தான் இயக்கியிருந்தார்கள். இந்தியத் திரையுலகத்தில் 1000 கோடி வசூலைக் கடந்த படங்கள் இவை.
அடுத்து எந்தப் படம் 1000 கோடி வசூலைப் பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதில் ஏதாவது ஒரு தமிழ்ப் படமாவது வந்துவிடாதா என தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அது இந்த ஆண்டில் நடக்குமா அல்லது அடுத்த ஆண்டில் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழிலிருந்து தெலுங்கிற்குச் சென்ற இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'கேம் சேஞ்சர்' படம் 1000 கோடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டு 200 கோடியைத் தாண்டாமல் போய்விட்டது. தமிழிலிருந்து ஹிந்திக்குச் சென்ற இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஹிந்திப் படமான 'சிக்கந்தர்' 200 கோடியைக் கூடத் தாண்டவில்லை.