ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் பற்றிய விமர்சனம், 'பெத்தி' இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? |

'கேஜிஎப் 1,2' படங்களின் மூலம் கன்னடத் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். 'கேஜிஎப் 2' படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் சாதனை படைத்தது. அடுத்து 'கேஜிஎப் 3' எப்போது வரும் என்று ரசிகர்களைக் கேட்க வைத்தது.
ஆனால், அதற்கடுத்து பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்த 'சலார்' படத்தை இயக்கினார் நீல். அப்படம் 2023ல் வெளிவந்தது. 'கேஜிஎப் 2' அளவிலான வரவேற்பையும், வசூலையும் தரவில்லை என்றாலும் அதில் பாதியளவாவது கிடைத்தது.
அப்படம் வெளிவந்த பின்பு 'சலார் 2' படம் ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்டது. 2024ன் துவக்கத்திலேயே அதற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகத் தயாரிப்பாளர் சொன்னார். 2026ம் ஆண்டு 'சலார் 2' வெளியாகும் என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிவித்தார்கள். ஒரு கட்டப் படப்பிடிப்பு நடந்து அதன்பின் நடக்கவில்லை.
இந்நிலையில் ஜுனியர் என்டிஆர் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஆரம்பித்தார் பிரசாந்த் நீல். முதலில் ஜுனியர் என்டிஆர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. நேற்று முதல் இதன் படப்பிடிப்பில் ஜுனியர் என்டிஆர் இணைந்தார். நேற்று கர்நாடகாவில் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது.
2026ம் ஆண்டு இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல். அப்படியென்றால் 'சலார் 2' அறிவித்தபடி வராதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜுனியர் என்டிஆர் படத்தை முடித்த பிறகே நீல் அடுத்து எந்தப் படத்தை இயக்குவார் என்பது தெரிய வரும் என்கிறார்கள். அதுவரை பிரபாஸ், யஷ் ரசிகர்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.