மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜனனி (ஜனனி ஐயர்). அதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2018ல் பிக்பாஸ் சீசன்-2வில் போட்டியாளராக பங்கேற்று மூன்றாவது ரன்னராக பரிசு பெற்றார். இந்த நிலையில் தற்போது திருமண பந்தத்தில் அடி எடுத்து வைக்கிறார் ஜனனி.
ஆம் இவருக்கும் விமான பைலட்டாக பணிபுரியும் ரோஷன் சியாம் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான திருமண நிச்சயதார்த்த நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள ஜனனி, “இப்போதும் எப்போதும்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.




