ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறும் ஸ்ரீலீலா | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் |
யூடியூப், சமூக வலைதளங்கள் வந்த பிறகு அதிக பார்வைகளைப் பெறும் டிரைலர்கள், பாடல்கள் நல்ல வசூலைப் பெறும் வரவேற்பைப் பெறும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. அது போல அதிக பாலோயர்களை வைத்திருப்பவர்களிடம் பணம் கொடுத்து தங்களது படங்களை 'புரமோஷன்' செய்தால் அது மக்களைச் சென்றடையும் என்ற தவறான நம்பிக்கையும் சினிமாவில் உள்ளது.
தற்போது 'அதிக பாலோயர்கள்' வைத்திருப்பவர்களைத்தான் சினிமா புரமோஷன்களுக்கும் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் சிலர். அது பற்றிய உண்மையான தெளிவான புரிதல் ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்துக் கொண்டிருக்கும் பூஜாவின் அடுத்த வெளியீடாக 'ரெட்ரோ' தமிழ்ப் படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில், “சமூக வலைதளங்களும், நிஜ வாழ்க்கையும் வெவ்வேறானவை. முகத்தைக் காட்டிக் கொள்ளாத பலரால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். நானும் மனுஷிதான். ஆனால், அது உண்மையானதல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனக்கு இன்ஸ்டாவில் 30 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவை அனைத்தும் 30 மில்லியன் சினிமா டிக்கெட்டாக மாறும் என்று சொல்ல முடியாது. அதே சமயம் சில சூப்பர் ஸ்டார்கள் 5 மில்லியன் பாலோயர்களை மட்டுமே வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் ரசிகர்களை தியேட்டர்களுக்கு மிக அதிகமாக வரவழைக்கிறார்கள். நமது வேலை சரியாகச் செய்வது முக்கியம், அதற்கான கருத்தை மக்களிடம் இருந்து நேரடியாகப் பெறுவதே சிறப்பு,” என்று பூஜா கூறியுள்ளார்.
இந்தப் புரிதல் மற்ற சினிமா பிரபலங்களிடமும் இருந்தால் சமூக வலைதள வரம்பு மீறிய 'டிரோல்கள், விமர்சனங்கள்' ஆகியவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும்.