ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி | ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி | அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா | நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் |

1944 - 1945ம் ஆண்டுகளில் தியாகராஜ பாகவதர் நடிப்பதாக நான்கு படங்கள் அறிவிக்கப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் 'கோகுலதாஸி'. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் எம்.கே.டி பாகவதர் 30 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட பல படங்களில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர் நடித்தார். அதில் இந்த படமும் ஒன்று.
'கோகுலதாஸி' பட திரைக்கதை எழுத்தாளர் இளங்கோவனால் எழுதப்பட்ட ஒரு புராண கற்பனை கதை. இதில் ஹொன்னப்பா மூன்று வேடங்களில் நடித்தார். நாரதர், பார்வதியின் சாபத்தை எதிர்கொள்ளும் காமரூபன், மற்றும் கதாநாயகி அனுராதாவை (ராஜம்மா) கவர மாறுவேடத்தில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் நகைக்கடைக்காரன் ஆகிய வேடங்களில் நடித்தார். கதாநாயகி ராஜம்மா நடனக் கலைஞராகவும், தேவதாசியாகவும் இரண்டு வேடங்களில் நடித்தார். லலிதாவும், பத்மினியும் துணை வேடங்களில் நடித்தனர், நடனமாடினர்.
பாடல்கள் பாபநாசம் சிவன் மற்றும் அவரது சகோதரர் ராஜகோபால ஐயர் ஆகியோரால் எழுதப்பட்டன. எஸ்.வி. வெங்கடராமன் இசையமைத்தார். கே.சுப்பிரமணியம் தயாரித்து, இயக்கினார். திறமையான நடிகர்கள், இசை மற்றும் திறமையான இயக்கம் இருந்தபோதிலும், கோகுலதாஸி வெற்றி பெறவில்லை.