சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

1944 - 1945ம் ஆண்டுகளில் தியாகராஜ பாகவதர் நடிப்பதாக நான்கு படங்கள் அறிவிக்கப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் 'கோகுலதாஸி'. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் எம்.கே.டி பாகவதர் 30 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட பல படங்களில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர் நடித்தார். அதில் இந்த படமும் ஒன்று.
'கோகுலதாஸி' பட திரைக்கதை எழுத்தாளர் இளங்கோவனால் எழுதப்பட்ட ஒரு புராண கற்பனை கதை. இதில் ஹொன்னப்பா மூன்று வேடங்களில் நடித்தார். நாரதர், பார்வதியின் சாபத்தை எதிர்கொள்ளும் காமரூபன், மற்றும் கதாநாயகி அனுராதாவை (ராஜம்மா) கவர மாறுவேடத்தில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் நகைக்கடைக்காரன் ஆகிய வேடங்களில் நடித்தார். கதாநாயகி ராஜம்மா நடனக் கலைஞராகவும், தேவதாசியாகவும் இரண்டு வேடங்களில் நடித்தார். லலிதாவும், பத்மினியும் துணை வேடங்களில் நடித்தனர், நடனமாடினர்.
பாடல்கள் பாபநாசம் சிவன் மற்றும் அவரது சகோதரர் ராஜகோபால ஐயர் ஆகியோரால் எழுதப்பட்டன. எஸ்.வி. வெங்கடராமன் இசையமைத்தார். கே.சுப்பிரமணியம் தயாரித்து, இயக்கினார். திறமையான நடிகர்கள், இசை மற்றும் திறமையான இயக்கம் இருந்தபோதிலும், கோகுலதாஸி வெற்றி பெறவில்லை.