மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
அஜித் நடித்து சமீபத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வசூலில் சக்கை போடு போடுகிறது. தமிழகத்தில் மட்டும் முதல் 2 நாட்களில் சுமார் 45 கோடி வரை வசூலித்துள்ளது. இதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை யார் எடுக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நமக்கு கிடைத்த தகவலின்படி அஜித்தை வைத்து அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமே அஜித்தை அணுகியதாகவும் அதற்கு அஜித் பச்சைக்கொடி காட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
குட் பேட் அக்லி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டதும் இதே நிறுவனமே. இந்த படத்தின் வசூல் வேட்டையால் அஜித் மீது நம்பிக்கை வைத்து அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் இந்த படத்தை இயக்குவது யார் என்று முடிவாகவில்லை. ஒரு வேலை ஆதிக் ரவிச்சந்திரனே இந்த படத்தை எடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது.