தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
அஜித் நடித்து சமீபத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வசூலில் சக்கை போடு போடுகிறது. தமிழகத்தில் மட்டும் முதல் 2 நாட்களில் சுமார் 45 கோடி வரை வசூலித்துள்ளது. இதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை யார் எடுக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நமக்கு கிடைத்த தகவலின்படி அஜித்தை வைத்து அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமே அஜித்தை அணுகியதாகவும் அதற்கு அஜித் பச்சைக்கொடி காட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
குட் பேட் அக்லி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டதும் இதே நிறுவனமே. இந்த படத்தின் வசூல் வேட்டையால் அஜித் மீது நம்பிக்கை வைத்து அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் இந்த படத்தை இயக்குவது யார் என்று முடிவாகவில்லை. ஒரு வேலை ஆதிக் ரவிச்சந்திரனே இந்த படத்தை எடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது.