பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

மிகப்பெரிய ஏற்றங்களும், மிகப்பெரிய இறக்கங்களும் கொண்டது விஜயகாந்த் சினிமா வாழ்க்கை. சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு பிறகு அவரது திரை வாழ்க்கை முற்றிலும் மாறியது. ரஜினி, கமல் இருவரும் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், தனக்கென தனி பாதை போட்டு வெற்றி படங்களை கொடுத்தவர் விஜயகாந்த்.
1984ம் ஆண்டு, விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டு. அந்த வருடத்தில் மட்டும் 18 படங்களில் நடித்தார் விஜயகாந்த். குழந்தை யேசு, சபாஷ், தீர்ப்பு என் கையில், நல்லநாள், நாளை உனது நாள், நூறாவது நாள், மதுரை சூரன், மெட்ராஸ் வாத்தியார், வீட்டுக்கு ஒரு கண்ணகி, வெள்ளைப் புறா ஒன்று, வெற்றி, வேங்கையின் மைந்தன், ஜனவரி 1, குடும்பம், சத்தியம் நீயே, மாமன் மச்சான், உள்பட அந்த வருடத்தில் மொத்தம் 18 படங்களில் நடித்தார் விஜயகாந்த். இந்தப் படங்களுடன்தான் விஜயகாந்துக்கு திருப்பம் தந்த 'வைதேகி காத்திருந்தாள்' படமும் வெளிவந்தது.