தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
இந்தியாவின் 'முதல் மகாத்மா' என்று அழைக்கப்படும், ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் வாழ்க்கை வரலாறு 'பூலே' என்ற திரைப்படமாக தயாராகி உள்ளது. இந்த படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. இப்படத்தை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கியிருந்தார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிராமண சமூகத்தினர் இத்திரைப்படத்தில் அவர்களை தவறாக சித்தரித்திருப்பதாக கூறி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் ‛யூ' சான்றிதழ் வழங்கியிருந்தது. பிறகு படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு, படக்குழுவினருக்கு உத்தரவிட்டிருந்தது. அதோடு சாதி குறித்தான உரையாடலைக் கொண்ட வாய்ஸ் ஓவரையும், சாதிய அமைப்பை விளக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது. படத்தில் சில வசனங்களையும் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள்.
இதனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை, இது குறித்து படத்தில் இயக்குனர் ஆனந்த் மகாதேவன் கூறும்போது, ''படத்தின் டிரைலர் பற்றி சில தவறான புரிதல்கள் இருக்கிறது. படத்தைப் பார்ப்பதில் எந்த தொந்தரவும் இருக்காது, என்றாலும் சில சந்தேகங்களை அகற்ற வேண்டியது இருக்கிறது." என்கிறார்.