கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
நடிகர் தனுஷ் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் ' நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' . இதில் அவரின் அக்கா மகன் பவிஷ் நாராயணன் என்பவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்தனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றன. படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதை படம் பூர்த்தி செய்யவில்லை. இதனால் படம் சுமாரான வசூலை பெற்றது.
இந்நிலையில் பவிஷ் அடுத்து கதாநாயகனாக நடிக்க தனுஷ் ஒருபுறம் கதை கேட்டு வருகிறார். மறுபுறம் 20க்கும் மேற்பட்ட இயக்குனர்களரிடம் கதை கேட்டுள்ளார் பவிஷ். இந்த படத்தையும் தனுஷ், அவரது வுண்டர் பார் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பார் என்கிறார்கள்.