நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது கோவை, அதன் சுற்றுவட்டாரம் மற்றும் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திலும் அதே டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கும் நிலையில், அவரது மருமகளாக முதல் பாகத்தில் நடித்த மிர்னா மேனன் மீண்டும் நடித்து வருகிறார். அதேபோல் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ரம்யா கிருஷ்ணனும் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.
இது குறித்த தகவலை அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், ஜெயிலர்-2 படப்பிடிப்பில் கடந்த பத்தாம் தேதி தான் கலந்து கொண்டதாகவும், அதே நாள்தான் ரஜினியுடன் தான் இணைந்து நடித்த படையப்பா படத்தின் 26வது ஆண்டு நாள் என்றும் தெரிவித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன், படையப்பா 26வது ஆண்டு நாளில் மீண்டும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினியுடன் இணைந்தது மகிழ்ச்சி என்றும் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனனை தொடர்ந்து யோகி பாபுவும் ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த அதே வேடத்தில் நடிக்கும் நிலையில், எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கிறார்.