நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகை சோனா தனது வாழ்க்கை கதையை 'ஸ்மோக்' என்ற பெயரில் வெப் தொடராக தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இந்த தொடரின் படப்பிடிப்பு புட்டேஜ் அடங்கிய ஹார்டிஸ்கை படத்தில் பணியாற்றிய மானேஜர் எடுத்து வைத்துக் கொண்டு தர மறுப்பதாகவும், அவருக்கு ஆதராவாக பெப்சி செயல்படுவதாகவும் கூறி பெப்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த பிரச்னையில் நடிகர் சங்கம் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளது. ஹார்டிஸ்க்கும் சோனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சோனா கூறம்போது, "நான் ஒரு விஷயத்துல இறங்கிவிட்டால் அதற்கு தீர்வு காணாமல் விடமாட்டேன். இப்போது இந்த விஷயம் நல்ல படியாக முடிந்திருக்கிறது. இதில் நடிகர் சங்கம் தலையிட்டதும் பெப்சி அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதில் நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். எல்லா விஷயத்தையும் நான் சொன்னேன். அவர்கள் என் தரப்பு நியாயத்தை உணர்ந்து ஹார்டிஸ்கை வாங்கி கொடுத்தார்கள். இந்த விஷயத்தில் எனக்கு உதவிய பெப்சி நிர்வாகத்துக்கும், நடிகர் சங்கத்துக்கும், எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி எனது பணியை நான் விரைவாக தொடர்வேன்'' என்றார்.