'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

விபின் ராதாகிருஷ்ண இயக்கத்தில் கீதா கைலாசம் நடிக்கும் படம் ‛அங்கம்மாள்'. பெருமாள் முருகனின் ‛கோடித்துணி' என்ற சிறு கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த கதைக்காக ஜாக்கெட் அணியாமல் அந்த காலத்து பெண்ணாக நடித்துள்ளார் கீதா கைலாசம். அந்த கேரக்டருக்காக பீடி, சுருட்டு பிடிக்கவும் பயிற்சி எடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‛‛பல படங்களில் அம்மாவாக, குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும் இதில் கதை நாயகியாக நடிக்கிறேன். 1990 காலகட்டத்தில் நாமக்கலில் இந்த கதை நடப்பதாக இருந்தது. ஆனால் நாங்கள் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் படப்பிடிப்பு நடத்தினோம். இந்த கதைக்காக டிவிஎஸ் 50 ஓட்டினேன். இந்த கேரக்டர் பிடி, சுருட்டு பிடிக்கும் என்பதால் படப்பிடிப்புக்கு முன்பே அந்த காட்சியில் நடிக்க பயிற்சி எடுத்தேன். ஒரு அம்மா, இரண்டு மகன்களின் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் ஜாக்கெட் அணிவது ஆகியவை இந்த கதையின் முக்கியமான விஷயம்.
நியூயார்க் திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா உள்ளிட்ட பல விழாக்களில் இந்த படத்துக்கு வரவேற்பும், விருதும் கிடைத்துள்ளது. எங்கள் குடும்பத்தில் பலரும் தேசிய விருது வாங்கி இருக்கிறார்கள். எனக்கு தேசிய விருது கிடைக்குமா என தெரியவில்லை. தேசிய விருது கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி. படம் பார்த்த எழுத்தாளர் பெருமாள் முருகனும் படக்குழுவை பாராட்டுயுள்ளார். இப்படி மாறுபட்ட, வித்தியாசமான கதைகளில் நடிப்பது எனக்கும் சவாலாக இருக்கிறது'' என்றார்.




