மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

விபின் ராதாகிருஷ்ண இயக்கத்தில் கீதா கைலாசம் நடிக்கும் படம் ‛அங்கம்மாள்'. பெருமாள் முருகனின் ‛கோடித்துணி' என்ற சிறு கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த கதைக்காக ஜாக்கெட் அணியாமல் அந்த காலத்து பெண்ணாக நடித்துள்ளார் கீதா கைலாசம். அந்த கேரக்டருக்காக பீடி, சுருட்டு பிடிக்கவும் பயிற்சி எடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‛‛பல படங்களில் அம்மாவாக, குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும் இதில் கதை நாயகியாக நடிக்கிறேன். 1990 காலகட்டத்தில் நாமக்கலில் இந்த கதை நடப்பதாக இருந்தது. ஆனால் நாங்கள் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் படப்பிடிப்பு நடத்தினோம். இந்த கதைக்காக டிவிஎஸ் 50 ஓட்டினேன். இந்த கேரக்டர் பிடி, சுருட்டு பிடிக்கும் என்பதால் படப்பிடிப்புக்கு முன்பே அந்த காட்சியில் நடிக்க பயிற்சி எடுத்தேன். ஒரு அம்மா, இரண்டு மகன்களின் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் ஜாக்கெட் அணிவது ஆகியவை இந்த கதையின் முக்கியமான விஷயம்.
நியூயார்க் திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா உள்ளிட்ட பல விழாக்களில் இந்த படத்துக்கு வரவேற்பும், விருதும் கிடைத்துள்ளது. எங்கள் குடும்பத்தில் பலரும் தேசிய விருது வாங்கி இருக்கிறார்கள். எனக்கு தேசிய விருது கிடைக்குமா என தெரியவில்லை. தேசிய விருது கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி. படம் பார்த்த எழுத்தாளர் பெருமாள் முருகனும் படக்குழுவை பாராட்டுயுள்ளார். இப்படி மாறுபட்ட, வித்தியாசமான கதைகளில் நடிப்பது எனக்கும் சவாலாக இருக்கிறது'' என்றார்.