என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
1947ம் ஆண்டு தியாகராஜ பாகவதரும், அன்றைய முன்னணி இளம் நடிகையுமான வசுந்தராதேவி ஆகியோர் நடிப்பதாக பிரமாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கிய படம் 'உதயணன் வாசவதத்தா'. படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கினார், ஏ.எஸ்.ஏ.சாமி வசனம் எழுதினார். பாபநாசம் சிவன் இசை அமைத்தார்.
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்தது. 25 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவருக்கு பதிலாக பாடகர் ஜி.என்.பாலசுப்பிரமணியம் நடித்தார்.
இவருடன் எம்.எஸ்.சரோஜா, டி.பாலசுப்ரமணியம், கே.சாரங்கபாணி, காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், என்.கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.வீரப்பா, டி.கே.சம்பங்கி, எம்.வி.மணி, கொளத்து மணி, வி.நா.ராஜா, டி. கமலம், கே.என்.ராஜம் மற்றும் என்.நாகசுப்ரமணியம் ஆகியோர் நடித்தனர்.
பாகவதர் நடிக்காததால் பல விநியோகஸ்தர்கள் வியாபாரத்தை துண்டித்தனர். அழகான காதல் கதை, ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் மார்கஸ் பர்ட்லே, வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட். ஆனாலும் தியாகராஜா பாகவதர் நடிக்காததால் படம் படுதோல்வி அடைந்தது.