மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தெலுங்கில் கடந்த 2011ல் 'அல மொதலைந்தி' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பி.வி நந்தினி ரெட்டி. கடந்த 15 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் தாக்கு பிடித்து, சீரான இடைவெளியில் படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் கடந்த 2013ல் 'ஜபர்தஸ்த்' என்கிற படத்தில் சமந்தாவை கதாநாயகியாக வைத்து முதன்முறையாக அவருடன் கூட்டணி சேர்ந்தார். அதைத்தொடர்ந்து 2019ல் வெளியான 'ஓ பேபி' என்கிற படத்தை சமந்தாவை வைத்து இயக்கினார். இந்த படத்தில் சமந்தா 70 வயது கிழவி, டீன் ஏஜ் பெண் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.
இப்படி சமந்தாவின் நடிப்புக்கு தீனி போடும் படங்களாக கொடுத்து வந்த நந்தினி ரெட்டி, 6 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தற்போது சமந்தாவை வைத்து மூன்றாவது முறையாக படம் ஒன்றை இயக்க இருக்கிறார். சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட திருவிழாவில் கலந்து கொண்டு, சினிமாவில் பெண்கள் என்கிற தலைப்பில் அவர் பேசும்போது பேச்சுவாக்கில் மீண்டும் சமந்தாவுடன் இணைந்து அடுத்த படம் செய்கிறேன் என கூறியுள்ளார் நந்தினி ரெட்டி.




