தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் | டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து |

தமிழில் கடைசியாக சசிகுமாருடன் இணைந்து 'உடன்பிறப்பே' என்ற படத்தில் நடித்திருந்தார் ஜோதிகா. அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்றவர், 'சைத்தான், ஸ்ரீகாந்த்' போன்ற படங்களில் நடித்தார். தற்போது 'டப்பா கார்டெல்' என்று வெப் தொடரில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், ஜோதிகா அளித்துள்ள ஒரு பேட்டியில், ''தென்னிந்திய சினிமாவில் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் தான் அதிகமாக வருகிறது. பெரும்பாலும் நடிகைகளை கிளாமராக நடிக்க வைப்பது, பாடல்களுக்கு நடனமாட மட்டுமே பயன்படுத்த நினைக்கிறார்கள். இன்னும் சில படங்களில் ஆண்களை புகழ்ந்து பேசுவதற்கும் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் எனக்கு அதுபோன்ற வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லை. அதனால் தான் எனக்கு பிடித்தமான கதையின் நாயகியாக சில கதைகளை தேர்வு செய்து நடித்தேன். எதிர்காலத்திலும் எனக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடிப்பேன்'' என்று தெரிவித்திருக்கிறார் ஜோதிகா.




