'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழில் கடைசியாக சசிகுமாருடன் இணைந்து 'உடன்பிறப்பே' என்ற படத்தில் நடித்திருந்தார் ஜோதிகா. அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்றவர், 'சைத்தான், ஸ்ரீகாந்த்' போன்ற படங்களில் நடித்தார். தற்போது 'டப்பா கார்டெல்' என்று வெப் தொடரில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், ஜோதிகா அளித்துள்ள ஒரு பேட்டியில், ''தென்னிந்திய சினிமாவில் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் தான் அதிகமாக வருகிறது. பெரும்பாலும் நடிகைகளை கிளாமராக நடிக்க வைப்பது, பாடல்களுக்கு நடனமாட மட்டுமே பயன்படுத்த நினைக்கிறார்கள். இன்னும் சில படங்களில் ஆண்களை புகழ்ந்து பேசுவதற்கும் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் எனக்கு அதுபோன்ற வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லை. அதனால் தான் எனக்கு பிடித்தமான கதையின் நாயகியாக சில கதைகளை தேர்வு செய்து நடித்தேன். எதிர்காலத்திலும் எனக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடிப்பேன்'' என்று தெரிவித்திருக்கிறார் ஜோதிகா.