''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் | தென்னிந்திய சினிமாவில் ஆண்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்! - ஜோதிகா வெளியிட்ட தகவல் | இந்த வாரமும் இத்தனை படங்களா ? தூங்கும் சங்கங்கள்… | பிளாஷ்பேக்: பானுமதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சாவித்திரி நடித்து வெற்றியை பதிவு செய்த “மிஸ்ஸியம்மா” | 25வது திருமண நாள்: பழனி முருகன் கோவிலில் குஷ்பு, சுந்தர் சி | வில்லியாக நடிப்பது ஹேப்பி தான்: சுஜாதா | அந்த இயக்குநர் என்னை ஏமாற்றிவிட்டார்: ஜீவிதா பரபரப்பு குற்றச்சாட்டு | 'சிக்கந்தர்' ரீமேக் படம் இல்லை: ஏஆர் முருகதாஸ் |
பழம்பெரும் நடிகர் ஓம்புரியின் முன்னாள் மனைவியும், நடிகை அனு கபூரின் சகோதரியும், எழுத்தாளர் மற்றும் இயக்குனருமான சீமா கபூரின் சுயசரிதை மும்பையில் வெளியிடப்பட்டது. 'Yun Guzari Hai Ab Talak' என பெயரிடப்பட்டுள்ள இந்த சுயசரிதையின் வெளியீட்டு விழாவில் அனுபம் கெர், பரேஷ் ராவல், தயாரிப்பாளர் போனி கபூர், அனு கபூர், திவ்யா தத்தா, ரகுவீர் யாதவ், பாடகர் ஜஸ்பிந்தர் நருலா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சீமா கபூர் கூறுகையில், ‛‛இந்த நிகழ்ச்சிக்கு வருதை தந்த அனுபம் கெர், பரேஷ் ராவல் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் வாழ்வில் இதை மறக்க மாட்டேன். என் தாய்வழி தாத்தா ஒரு புரட்சியாளர். அவர்கள் பெங்காலியை சேர்ந்த கலைஞர்களும் கூட. என் தாத்தா ராணுவத்தில் கர்னலாக இருந்தார். ஆனால் என் அப்பா டில்லிக்கு வந்து 250 பேர் அடங்கிய நாடக கம்பெனியை துவக்கிவிட்டார். அதன்பின் சினிமா தாக்கத்தால் நாடகங்கள் வெகு தொலைவில் சென்றன. மெல்ல மெல்ல நாடக கம்பெனிகள் மூடப்பட்டன. இருப்பினும் கடன்கள் பெற்று, அம்மாவின் நகை, புடவைகளை விற்று கலைஞர்களின் தேவைகளை அப்பா பூர்த்தி செய்தார்'' என்றார்.
அனு கபூர் கூறுகையில்,‛‛எனது சகோதரி சீமா கபூரின் சுயசரிதை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. சீமா எத்தனையோ வலிகளையும், சித்ரவதைகளையும், துயரங்களையும் கடந்து வந்திருக்கிறார். அவர் துணிச்சலான பெண். எங்களுக்கு ஒரே ஒரு சகோதரி. நிறைய சிரித்திருக்கிறார், அழுதிருக்கிறார். அனைவருக்கும் உதவ வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பவர். இந்த சுயசரிதை சோகங்களின் கதை. எனது சகோதரி தனது பெற்றோருக்கு மிகுந்த மரியாதை அளித்துள்ளார். இந்த புத்தகம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது'' என்றார்.
பரேஷ் ராவல் கூறுகையில், ‛‛சுயசரிதை எழுதுவது எளிதான காரியம் அல்ல, சவாலானது. அவரின் இந்த படைப்பில் நான் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். அவரின் சுயசரிதையை கண்டிப்பாக படிப்பேன்'' என்றார்.