ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
1984ல் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான மாதுரி தீக்சித், 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்மபூஷன் விருதை பெற்றுள்ள இவர், 1999ல் மருத்துவர் ஸ்ரீராம் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். கடைசியாக 'பூல் புலையா 3' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 57 வயதிலும் இணையத்தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற மாதுரி தீக்சித் பேசியதாவது: பெண்கள் காலத்துக்கும் தங்களை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆண்களுக்கு சமமானவர்கள் பெண்கள் என பார்வையாளர்களை எங்களாலும் ஈர்க்க முடியுமென ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது. உண்மையில் சினிமா துறையில் பாலின பாகுபாடு உள்ளது. குழந்தை அடியெடுத்து வைப்பதுபோல ஒவ்வொன்றாக பொறுமையாக எடுத்து வைத்து முன்னேறுகிறோம்.
பாகுபாடு நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதை நோக்கிதான் தினமும் வேலை செய்து வருகிறோம். சம்பளத்தில் கூட பாகுபாடு உள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு பெண்களிடம் வந்து சேர்வதை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். இதற்கு நடிகர்கள்தான் பதிலளிக்க வேண்டுமென நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.