கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
1984ல் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான மாதுரி தீக்சித், 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்மபூஷன் விருதை பெற்றுள்ள இவர், 1999ல் மருத்துவர் ஸ்ரீராம் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். கடைசியாக 'பூல் புலையா 3' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 57 வயதிலும் இணையத்தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற மாதுரி தீக்சித் பேசியதாவது: பெண்கள் காலத்துக்கும் தங்களை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆண்களுக்கு சமமானவர்கள் பெண்கள் என பார்வையாளர்களை எங்களாலும் ஈர்க்க முடியுமென ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது. உண்மையில் சினிமா துறையில் பாலின பாகுபாடு உள்ளது. குழந்தை அடியெடுத்து வைப்பதுபோல ஒவ்வொன்றாக பொறுமையாக எடுத்து வைத்து முன்னேறுகிறோம்.
பாகுபாடு நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதை நோக்கிதான் தினமும் வேலை செய்து வருகிறோம். சம்பளத்தில் கூட பாகுபாடு உள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு பெண்களிடம் வந்து சேர்வதை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். இதற்கு நடிகர்கள்தான் பதிலளிக்க வேண்டுமென நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.