ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய முதல் படம் 'சென்னை -28'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு அவர் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு சரோஜா, கோவா போன்ற படங்களை இயக்கியவர், பின்னர் அஜித் நடிப்பில் 'மங்காத்தா' படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார். அந்த படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்த நிலையில், 2016ம் ஆண்டு தனது முதல் படமான 'சென்னை- 28' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் வெங்கட்பிரபு.
இந்நிலையில் தற்போது, 'மாநாடு, கஸ்டடி, கோட்' படங்களுக்கு பிறகு சென்னை- 28 படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கப் போகிறார். முதல் இரண்டு பாகங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்த ஜெய், மிர்ச்சி சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி ஆகியோரே இந்த படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.