லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய முதல் படம் 'சென்னை -28'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு அவர் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு சரோஜா, கோவா போன்ற படங்களை இயக்கியவர், பின்னர் அஜித் நடிப்பில் 'மங்காத்தா' படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார். அந்த படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்த நிலையில், 2016ம் ஆண்டு தனது முதல் படமான 'சென்னை- 28' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் வெங்கட்பிரபு.
இந்நிலையில் தற்போது, 'மாநாடு, கஸ்டடி, கோட்' படங்களுக்கு பிறகு சென்னை- 28 படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கப் போகிறார். முதல் இரண்டு பாகங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்த ஜெய், மிர்ச்சி சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி ஆகியோரே இந்த படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.