தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
‛விடாமுயற்சி' படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛குட் பேட் அக்லி'. இந்த படம் திரைக்கு வந்து மூன்று நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதோடு இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்திலேயே அஜிதகுமார் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஜித் நடிப்பில் ‛மங்காத்தா' படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, தற்போது ‛மங்காத்தா 2' படம் குறித்த கேள்விக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛மங்காத்தா -2 படத்தை இயக்க வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதேபோன்று எனக்கும் அந்த படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதோடு, மங்காத்தா- 2 இல்லாமல் வேறு கதையை அஜித்திடம் சொல்லி ஓகே பண்ணி அந்த படத்தை இயக்கலாமா? என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. முக்கியமாக அஜித்குமாரை பொறுத்தவரை எப்போது எந்த இயக்குனரை தேர்வு செய்வார் என்பதை கணிக்கவே முடியாது.
‛சென்னை -28, சரோஜா, கோவா' போன்ற சிறிய படங்களை நான் இயக்கியிருந்த நேரத்தில் திடீரென்று எனக்கு ‛மங்காத்தா' படத்தை இயக்கும் ஒரு வாய்ப்பை கொடுத்தார். அதனால் கவனிக்கப்படும் இயக்குனரானேன்'' என்று கூறும் வெங்கட்பிரபு, ‛‛என்னைப்பொறுத்தவரை மங்காத்தா- 2 படத்தை இயக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அஜித் அவர்கள் சொல்லும் பதிலில்தான் அந்த படம் உருவாகுமா? இல்லையா? என்பது தெரியும். அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்'' என்கிறார் வெங்கட் பிரபு.