யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
மலையாள திரையுலகில் இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் தியான் சீனிவாசன். இவர் பிரபல சீனியர் நடிகரான சீனிவாசனின் மகன். இளம் இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசனின் தம்பி. அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, நிவின்பாலி இணைந்து நடித்த லவ் ஆக்ஷன் ட்ராமா என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். ஆனால் தற்போது டைரக்ஷனை தள்ளி வைத்துவிட்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள ஆப் கைசே ஹோ என்கிற மலையாள படம் ஹிந்தி டைட்டிலுடன் நேற்று வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தியான் சீனிவாசனிடம் நிரூபர் ஒருவர் நீங்கள் இப்படி அதிக படங்களில் நடிப்பது உங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக தான் என்று சொல்லப்படுகிறதே என்று ஒரு கேள்வியை எழுப்பினார். இந்த கேள்வியால் கொஞ்சம் டென்ஷனான தியான சீனிவாசன் உங்களிடம் அது குறித்து ஆதாரப்பூர்வமான தகவல் இருந்தால் தயவு செய்து கேள்வி கேளுங்கள் எரிச்சல் ஊட்டும் விதமாக கேள்விகளை கேட்காதீர்கள் என்று கூறினார்.
மேலும், “எனக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைப்பதற்காக நான் ஸ்கிரிப்ட்டுகளை படிக்க கூட தேவையில்லை. இதுபோன்று யாரிடமும் எரிச்சல் ஊட்டும் கேள்விகளை கேட்காததால் தான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. பட வாய்ப்புகளை பெறுவதற்கு ஒழுக்கமாகவும் நாகரீகமாகவும் நடந்து கொண்டால் மட்டுமே போதும். நீங்கள் தற்போது செய்வது போல மற்றவர்களை இதுபோன்று எரிச்சல் ஊட்டாமல் இருந்தாலே போதும்” என்று கூறினார்.
எப்போதும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலகலப்பாக பேசும் தியான் சீனிவாசனையே இந்த அளவிற்கு கோபப்பட வைத்து விட்டார்களே என்று ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.