ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவரும், பிரபலமான ராஜ்குமார் குடும்பத்து வாரிசுகளில் ஒருவருமான நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த 2021ம் வருடம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனது 46வது வயதிலேயே மரணம் அடைந்தார். இது கன்னட திரையுலகிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வரும் மார்ச் 14ம் தேதி அவரது ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு புனீத் ராஜ்குமார் கன்னடத்தில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமான அப்பு திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக அவரது மனைவி அஸ்வினி தனது சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2002ல் புனீத் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமாக முடிவு செய்த போது கன்னடத்தில் யாரையும் அழைக்காமல் தெலுங்கில் இருந்து பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை அழைத்து வந்து அந்த படத்தை இயக்க வைத்தார்கள். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று 200 நாட்கள் ஓடியது. ரக்ஷிதா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் கன்னடத்தில் வெற்றி பெற்ற சூட்டோடு சூடாக இதை தெலுங்கிலும் இடியட் என்கிற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார் பூரி ஜெகன்நாத். இந்த படம் தான் பின்னர் தமிழில் சிம்பு நடிக்க தம் என்கிற பெயரிலும் ரீமேக் ஆனது. இந்த மூன்று படங்களிலும் ரக்ஷிதா தான் கதாநாயகியாக நடித்திருந்தார் என்று என்பது குறிப்பிடத்தக்கது.




