எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவரும், பிரபலமான ராஜ்குமார் குடும்பத்து வாரிசுகளில் ஒருவருமான நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த 2021ம் வருடம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனது 46வது வயதிலேயே மரணம் அடைந்தார். இது கன்னட திரையுலகிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வரும் மார்ச் 14ம் தேதி அவரது ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு புனீத் ராஜ்குமார் கன்னடத்தில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமான அப்பு திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக அவரது மனைவி அஸ்வினி தனது சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2002ல் புனீத் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமாக முடிவு செய்த போது கன்னடத்தில் யாரையும் அழைக்காமல் தெலுங்கில் இருந்து பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை அழைத்து வந்து அந்த படத்தை இயக்க வைத்தார்கள். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று 200 நாட்கள் ஓடியது. ரக்ஷிதா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் கன்னடத்தில் வெற்றி பெற்ற சூட்டோடு சூடாக இதை தெலுங்கிலும் இடியட் என்கிற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார் பூரி ஜெகன்நாத். இந்த படம் தான் பின்னர் தமிழில் சிம்பு நடிக்க தம் என்கிற பெயரிலும் ரீமேக் ஆனது. இந்த மூன்று படங்களிலும் ரக்ஷிதா தான் கதாநாயகியாக நடித்திருந்தார் என்று என்பது குறிப்பிடத்தக்கது.