என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தக்லைப்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 16ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியா - பாகிஸ்தான் போர் நடைபெற்று வருவதால் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்துள்ளார் கமல். 
அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், 'கொண்டாட்டத்திற்கான நேரம் இதுவல்ல. மவுன ஒருமைப்பாட்டிற்கான நேரம் என நம்புகிறேன். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் நாட்டின் பாதுகாப்புக்காக விழிப்புடன் இருந்து வரும் வீரர்கள் வீராங்கனைகள் மீது அமைதி எண்ணங்கள் செல்கிறது. நாட்டு மக்களாகிய நாமெல்லாம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நேரம். இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல, சிந்தனைக்கான நேரம்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன். 
 
           
             
           
             
           
             
           
            