வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தக்லைப்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 16ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியா - பாகிஸ்தான் போர் நடைபெற்று வருவதால் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்துள்ளார் கமல்.
அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், 'கொண்டாட்டத்திற்கான நேரம் இதுவல்ல. மவுன ஒருமைப்பாட்டிற்கான நேரம் என நம்புகிறேன். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் நாட்டின் பாதுகாப்புக்காக விழிப்புடன் இருந்து வரும் வீரர்கள் வீராங்கனைகள் மீது அமைதி எண்ணங்கள் செல்கிறது. நாட்டு மக்களாகிய நாமெல்லாம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நேரம். இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல, சிந்தனைக்கான நேரம்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.




