பரமசிவன் பாத்திமாவுக்கு மறு தணிக்கையில் 'ஏ ' சான்றிதழ் | பிளாஷ்பேக்: ஹீரோயின்கள் ஆன லலிதா, பத்மினி | தமிழுக்கு வரும் ஸ்ராவணி ஷெட்டி | பிலிம் சேம்பர் மூலம் கட்டண உயர்வுக்கு விண்ணப்பித்த பவன் கல்யாண் படத் தயாரிப்பாளர் | பிளாஷ்பேக் : விசு இயக்கிய கமர்சியல் ஆக்சன் படம் | ஜுன் 5, 6ல் 4 படங்கள் ரிலீஸ் | கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் | ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ் | இளையராஜாவை வாழ்த்தாத சினிமா பிரபலங்கள் |
அஜித் நடித்த 'வாலி', விஜய், ஜோதிகா நடித்த 'குஷி', படங்களை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.ஆர்யா. அதன் பிறகு அவர் இயக்கிய படங்களில் அவரே நடித்தார். சில காலம் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த சூர்யா, 'இறைவி' படத்தின் மூலம் மீண்டும் நடிகராக வலம் வரத் தொடங்கினார். முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் மளமளவென உயர்ந்தார். தற்போது ஹீரோக்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார்.
இந்த நிலையில் தான் ஈட்டிய வருமானத்திற்கு உரிய வரியான 7 கோடியே 57 லட்சம் செலுத்தவில்லை என வருமானவரித்துறை வழக்கு தாக்கல் செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கை உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யவில்லை. 467 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல; எனவே அதனை தள்ளுபடி செய்கிறோம், என்று உத்தரவிட்டது.