நாம ‛குட்'-ஆ இருந்தாலும் உலகம் ‛பேட்'-ஆக்குது : குட் பேட் அக்லி டீசர் வெளியானது | வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் |
அஜித் நடித்த 'வாலி', விஜய், ஜோதிகா நடித்த 'குஷி', படங்களை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.ஆர்யா. அதன் பிறகு அவர் இயக்கிய படங்களில் அவரே நடித்தார். சில காலம் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த சூர்யா, 'இறைவி' படத்தின் மூலம் மீண்டும் நடிகராக வலம் வரத் தொடங்கினார். முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் மளமளவென உயர்ந்தார். தற்போது ஹீரோக்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார்.
இந்த நிலையில் தான் ஈட்டிய வருமானத்திற்கு உரிய வரியான 7 கோடியே 57 லட்சம் செலுத்தவில்லை என வருமானவரித்துறை வழக்கு தாக்கல் செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கை உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யவில்லை. 467 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல; எனவே அதனை தள்ளுபடி செய்கிறோம், என்று உத்தரவிட்டது.