பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

அஜித் நடித்த 'வாலி', விஜய், ஜோதிகா நடித்த 'குஷி', படங்களை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.ஆர்யா. அதன் பிறகு அவர் இயக்கிய படங்களில் அவரே நடித்தார். சில காலம் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த சூர்யா, 'இறைவி' படத்தின் மூலம் மீண்டும் நடிகராக வலம் வரத் தொடங்கினார். முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் மளமளவென உயர்ந்தார். தற்போது ஹீரோக்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார்.
இந்த நிலையில் தான் ஈட்டிய வருமானத்திற்கு உரிய வரியான 7 கோடியே 57 லட்சம் செலுத்தவில்லை என வருமானவரித்துறை வழக்கு தாக்கல் செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கை உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யவில்லை. 467 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல; எனவே அதனை தள்ளுபடி செய்கிறோம், என்று உத்தரவிட்டது.