பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021ம் ஆண்டு வெளிவந்த படம் புஷ்பா. அப்படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். 200 கோடி பட்ஜெட்டில் உருவான அப்படம் 500 கோடி வசூலித்தது. மீண்டும் சுகுமார் இயக்கத்தில் அதே கூட்டணி புஷ்பா -2 படத்தில் இணைந்தார்கள். 500 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 1800 கோடி வரை வசூலித்தது.
இந்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் அளித்துள்ள ஒரு பேட்டியில், புஷ்பா-2 படத்தில் இடம்பெற்ற பெண் காட்சி குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், புஷ்பா -2 படத்தின் ஒரு பாடல் காட்சியில் புடவை அணிந்து பெண்ணை போன்று வேடமிட்டு நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னதும் முதலில் பயந்து விட்டேன். என்றாலும் அதன்பிறகு அந்த கேரக்டரை என் மனதில் உள்வாங்கி எனக்கு நானே ஒரு தைரியத்தை வர வைத்துக் கொண்டு அதில் நடித்தேன். அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பது எனக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார் அல்லு அர்ஜுன்.