பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோ | நடிகை வைபவி சாண்டில்யா திருமணம் | 'டிராகன், நி.எ.மே.எ.கோபம்' : முதல் நாள் வசூல் | பிரபுதேவா நிகழ்ச்சி : வருத்தத்துடன் விலகுவதாக சிருஷ்டி டாங்கே அறிவிப்பு | நெருக்கமான மற்றும் முத்தக்காட்சிகளுக்கு தடை போட்டுக்கொண்ட உன்னி முகுந்தன் | லூசிபர் 2ம் பாகத்தில் புத்திசாலித்தனமாக இணைந்தேன்: நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | ஓடிடியில் வெளியான டாக்கு மகாராஜ் : ஊர்வசி ரவுட்டேலாவின் காட்சிகள் நீக்கமா ? | 'டிராகன்' வரவேற்பு : 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' க்கு லாபம் | இரண்டு த்ரில்லர் படங்கள் மோதலில் பிப்ரவரி 28 | 'சண்டக்கோழி' படத்தில் நடிக்க மறுத்த விஜய் : லிங்குசாமி தகவல் |
தமிழகத்தில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களிலும் வழங்கப்படும் சினிமா டிக்கெட் கட்டணங்களில் இரட்டை வரி விதிக்கப்படுகிறது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி என சேர்த்தே கட்டணம் அமைந்துள்ளது.
உதாரணமாக, சென்னையில் உள்ள பிரபலமான தியேட்டர் ஒன்றில் உள்ள டிக்கெட் கட்டணம் ரூ.180. அதில் மாநில அரசால் விதிக்கப்படும் கேளிக்கை வரி ரூ.10, மத்திய அரசுக்கான ஜிஎஸ்டி வரி 9 சதவீதம், மாநில அரசுக்கான ஜிஎஸ்டி வரி 9 சதவீதம், தியேட்டர் பராமரிப்பு கட்டணம் ரூ.6 என சேர்த்து மொத்தமாக ரூ.180 கட்டணமாக வாங்கப்படுகிறது.
கேளிக்கை வரிக்கான தொகை, மாநில அரசுக்கான ஜிஎஸ்டி தொகை என இரட்டை வரிகள் மூலம் கிடைக்கும் தொகை மாநில அரசுக்கு சேருகிறது. இந்த இரட்டை வரி விதிப்பை விலக்க வேண்டும் என இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் முந்தைய ஆட்சியில் திரையுலகினர் ஸ்டிரைக் கூட நடந்தது. ஆனாலும், இப்போது வரை அந்த இரட்டை வரி நீக்கப்படவில்லை. இதில் ஜிஎஸ்டியை நீக்க வாய்ப்பில்லை. கேளிக்கை வரியை மாநில அரசு நினைத்தால் நீக்கலாம்.
இந்நிலையில் இன்று சென்னையில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் இரட்டை வரி முறையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரிடம் நிச்சயம் பேசுவேன் என்றும், விரைவில் மகிழ்ச்சியான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் கமல்ஹாசன் கோரிக்கைக்கு பதிலளித்தார்.