Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபுதேவா நிகழ்ச்சி : வருத்தத்துடன் விலகுவதாக சிருஷ்டி டாங்கே அறிவிப்பு | நெருக்கமான மற்றும் முத்தக்காட்சிகளுக்கு தடை போட்டுக்கொண்ட உன்னி முகுந்தன் | லூசிபர் 2ம் பாகத்தில் புத்திசாலித்தனமாக இணைந்தேன்: நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | ஓடிடியில் வெளியான டாக்கு மகாராஜ் : ஊர்வசி ரவுட்டேலாவின் காட்சிகள் நீக்கமா ? | 'டிராகன்' வரவேற்பு : 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' க்கு லாபம் | இரண்டு த்ரில்லர் படங்கள் மோதலில் பிப்ரவரி 28 | 'சண்டக்கோழி' படத்தில் நடிக்க மறுத்த விஜய் : லிங்குசாமி தகவல் | 'ராபர்' படத்தில் உண்மை சம்பவம் | பிளாஷ்பேக் : மணிவண்ணனை காப்பாற்றிய ஜோதி | பிளாஷ்பேக் : காஷ்மீர் இயக்குனரின் தமிழ் படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன?

21 பிப், 2025 - 05:02 IST
எழுத்தின் அளவு:
What-is-Shankars-explanation-for-the-Enforcement-Directorate-freezing-assets


'எந்திரன்' படத்தின் கதைத் திருட்டு விவகாரத்தில் அதன் இயக்குனர் ஷங்கர் சொத்துக்களை அமலாக்கத் துறை நேற்று முடக்கியது. சுமார் 10 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை, பிஎம்எல்ஏ (PMLA) விதிகளின் படி 17 பிப்ரவரி அன்று சென்னை, அமலாக்கத்துறை முடக்கியதாக நேற்று எக்ஸ் தளத்திலும் பதிவிட்டிருந்தார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கிய விவகாரம் இந்தியத் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து இயக்குனர் ஷங்கர் தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது: அசையா சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக அமலாக்கத்துறையிடம் இருந்து தகவல் இல்லை. எந்திரன் படம் தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அமலாக்கத்துறையின் தொடர் நடவடிக்கையால் மிகவும் வருத்தமடைகிறேன். குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்தது. இரு தரப்பு ஆதாரங்கள், வாதங்களை ஆராய்ந்து ஆரூர் தமிழ்நாடன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை சட்ட செயல்முறையின் அப்பட்டமான துஷ்பிரயோகத்தை குறிக்கிறது. அதிகாரிகள் தங்களது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன். மறுபரிசீலனை செயயவில்லை என்றால் அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா?டிக்கெட் கட்டணம், இரட்டை வரி ... தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in