எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'கங்குவா' படத்தையடுத்து நடிகர் சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் துவங்கிய படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் ஸ்வாசிகா, யோகி பாபு, ஷிவதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை நடிக்கின்றனர்.
சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வெளிச்சை எனும் பகுதியில் 'சூர்யா 45' படத்திற்கான படப்பிடிப்பு நடத்துவதாக இருந்தது. இதற்கான படப்பிடிப்பு கருவிகளுடன் படக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இதனையறிந்த அதிகாரிகள் அந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்ததில், உரிய அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவது தெரியவந்தது.
இதனையடுத்து அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்த அதிகாரிகள் தடை விதித்து, படப்பிடிப்பு கருவிகள் திருப்பி அனுப்பினர். மேலும், உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துமாறு ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சூர்யாவுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.