முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா |

'கங்குவா' படத்தையடுத்து நடிகர் சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் துவங்கிய படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் ஸ்வாசிகா, யோகி பாபு, ஷிவதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை நடிக்கின்றனர்.
சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வெளிச்சை எனும் பகுதியில் 'சூர்யா 45' படத்திற்கான படப்பிடிப்பு நடத்துவதாக இருந்தது. இதற்கான படப்பிடிப்பு கருவிகளுடன் படக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இதனையறிந்த அதிகாரிகள் அந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்ததில், உரிய அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவது தெரியவந்தது.
இதனையடுத்து அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்த அதிகாரிகள் தடை விதித்து, படப்பிடிப்பு கருவிகள் திருப்பி அனுப்பினர். மேலும், உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துமாறு ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சூர்யாவுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.